தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தல்
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் 1,050 இன் கீழ் தற்போது 150,000 பணியாளர்கள் அளவில் பணிபுரிகின்றமை பதிவாகியுள்ளது.
1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை முறைமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்கள் தொடர்பாக செயற்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை பயனுள்ள வகையில் ஒழுங்குபடுத்தவும் வினைத்திறனாக சேவையை வழங்குவதற்கு குறித்த சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால், வழங்கப்படுகின்ற சேவையின் இயல்புகளுக்கமைய சேவை வகைப்படுத்தல், குறித்த வகைப்படுத்தலின் அடிப்படையில் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைப் பயிற்றுவித்தல், தரப்பண்பான சேவையை வழங்குவதற்காக ஒழுக்கநெறிக் கோவையொன்றைத் தயாரித்தல் மற்றும் தேசிய தொழிற்கல்வி தகைமை (NVQ) மட்டத்திலான பயிற்சி வாய்ப்புக்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தல் மற்றும் குறித்த நிறுவனங்களுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்குதல் போன்ற பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கு இயலுமாகும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தல்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 24, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: