Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு.......


மிக நீண்டகாலமாக மக்கள் எதிர்நோக்கி வந்த வடிகான் பிரச்சினைக்கு தற்போது
தீர்வு கிட்டியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட உரிய தரப்பினருக்கு மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது........

புதிய காத்தான்குடி 167/D கிராம சேவகர் பிரிவு, அமானுல்லா வீதி, (அல் அமீன் சந்தியில் உள்ள குறித்த வீதியின் ஒருபதி) கடந்த காலங்களின் சிறிய மழை பொழிந்த போதும் கூட வெள்ளநீரால் நிரம்பி மிகவும் மோசமாகப் பாதிக்கப் படுவதுமாகவே இருந்து வந்ததுடன் இது தொடர்பாக மக்கள் தங்கள் வட்டார உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல முறை சுட்டிக்காட்டியும் அது சாத்தியமற்றுப்போனதாகவே இருந்து வந்துள்ளது.


குறிப்பாக கடந்த காலங்களில்
இவ்வீதியால் செல்லும் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால் இன்று இதன் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள ப்பட்டு வருவதனையிட்டு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

(யதார்த்தவாதி)




பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு....... Reviewed by www.lankanvoice.lk on மே 25, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.