தாக்குதல் குறித்து கடிதம் - காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் HR பிரிவிற்கு சீல்
ISIS பயங்கரவாதிகளினால் இலங்கையின் பொருளாதார மையத்தைத் தாக்குதல் நடத்தும் ஆபத்து குறித்து புலனாய்வு துறையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிகாரியான லுதினல் கர்னல் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களினுள் பரவிவருவது குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் HR பிரிவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2020 மே 18ம் திகதி இந்த கடிதம் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதுதான் அரசாங்கத்தினால் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்ததுடன் இதுபோன்ற தாக்குதலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் 100% தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
எவ்வாறாயினும் இந்த கடிதம் தொடர்பாக லுதினல் கர்னலிடம் கேட்டபோது புலனாய்வு பிரிவினால் இத்தகைய எச்சரிக்கையை விடுத்ததாக தனக்கு தகவல் அளித்தது இந்த நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மிக உயர்ந்த அதிகாரிகளில் ஒருவரால் என அவர் குறிப்பிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.sor.lnw
தாக்குதல் குறித்து கடிதம் - காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் HR பிரிவிற்கு சீல்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 25, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 25, 2020
Rating:


கருத்துகள் இல்லை: