மருதம் கலைக்கூடலின் ஆறாண்டு நிறைவு விழாவும் துறைசார் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 6 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (18) சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் மாலை 03.00 மணிக்கு நடைபெறும்.
மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எச். அஹமத் அம்ஜத், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீக்கா, டொப் குயின் அட்வடைசிங் உரிமையாளர் எம்.எச்.எம். அலி ரஜாய் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகவும் கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில், சமூகசேவை, கல்வி, கலை, கலாசார, இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற சேவைக்காக துறைசார் பிரமுகர்கள் ‘மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மன்றத்தின் செயலாளர் எம்.ஏ.சி.எம்.பாயிஸ் கரீம் தெரிவித்தார்.
மன்றத்தின் பிரதித் தலைவரும் ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல். நயீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கருத்துகள் இல்லை: