Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மரணச் செய்தி மிகவும் கவலையளிக்கின்றது -முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இரங்கள்-



சிரேஷ்ட அறிவிப்பாளர், ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மரணச் செய்தி மிகவும் கவலையளிக்கின்றது.

தான் பெற்ற கல்வி மூலம் சமூகத்துக்கு மிகப்பெரும் சேவையாற்றிய ஒருவர். ஆசிரியராக, அதிபராக, மிகச் சிறந்த அறிவிப்பாளராக, ஊடகவியலாளராக கடமையாற்றியவர். பன்னூலாசிரியர், நாடு முழுவதும் இலக்கிய துறையில், கலை துறையில் முஸ்லிம்களின் வளர்ச்சியில் கடுமையாக பாடுபட்ட ஒருவர். அவருடைய இழப்பு சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இவரது இழப்பால் கவலையுற்றுள்ள அன்னாரது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.

அத்துடன், எல்லாம் வல்ல இறைவன் அவருடைய தூய நோக்கத்தைப் பொருந்திக் கொண்டு அவருடைய பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்க்கையை இலகுபடுத்தி வைக்க பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ் இரங்கள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

-ஹம்ஸா கலீல்
சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மரணச் செய்தி மிகவும் கவலையளிக்கின்றது -முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இரங்கள்- Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 21, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.