Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பட்டதாரிகளின் கோரிக்கைகள்


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாவட்ட பட்டதாரிகளின் கோரிக்கைகள்அடங்கிய மகஜர் ஒன்று  (27) கையளிக்கப்பட்டது

அகில இலங்கை பட்டதாரிகளின் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருதி முன்னெடுக்கப்பட்டவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டதாரிகளின்சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது



இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டது 



.குறித்த மகஜரில் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம்இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்து அதற்கான தீர்வினை பெற்று தரவும் வேண்டும் என்றும் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் பட்டதாரிகள் என்ற வகையில் கணக்கிட படவேண்டும் எனவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வருமானம் இன்றி இருக்கின்ற பட்டதாரிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேர்தலை காரணம் காட்டி நியமன கடிதங்களைவழங்காது நியமனம் கடிதம் கிடைத்த பட்டதாரிகளை வேலைபொறுப்பேற்காது தடுத்தமை போன்ற கோரிக்கைகளை முன்னிலை படுத்தி குறித்த மகஜர் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டது





மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பட்டதாரிகளின் கோரிக்கைகள் Reviewed by www.lankanvoice.lk on மே 28, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.