காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டினில் சுனாமி பேரலை நினைவு தின நிகழ்வு
சுனாமி பேரலை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி அதை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நினைவு தின நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் (26.12.2019 வியாழக்கிழமை) காலை 9:20 மணிக்கு இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுனாமியால் உயிர் நீத்த சகோதரர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டினில் சுனாமி பேரலை நினைவு தின நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 27, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 27, 2019
Rating:









கருத்துகள் இல்லை: