முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை
முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.CIDயினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குடிவரவு குடியகழ்வு பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் குறித்து ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் நிகழ்த்திய ஊடக சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் ராஜித சேனாரத்ன வெளிநாடு சென்றால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அதனால் வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் வேண்டுகோள்விடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 23, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 23, 2019
Rating:
கருத்துகள் இல்லை: